Tuesday 18 September 2012

சகல கலா ஜீன்ஸ் - பெயர்க்காரணம்

(இந்த பதிவு முழுக்க முழுக்க ‘செக்ஸ்’ பற்றிய விழிப்புணர்வு தான்.. அதனால் பதினட்டு வயதுக்கு கீழுள்ளவர்கள் இதை தயவு செய்து நேரம் செலவிட்டு படிக்கவும்.. நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டாம்)

செக்ஸ் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது தான், இன்றியமையாததும் கூட, ஆனால், செக்ஸ் என்று நான் சொல்ல வருவது மனிதனை மட்டும் சார்ந்தது அல்ல. இது, ஒவ்வொரு உயிரின் செக்ஸையும் ஆராய்வது. மனிதனின் செக்ஸையும், அதை சார்ந்த விஷயங்களையும் ஏற்கனவே பல மஞ்சள் எழுத்தாளர்கள் எழுதி விட்டதால் நான் தனித்து நிற்க விரும்புகிறேன். நான் ஆராய்வது செக்ஸ் என்ற வார்த்தையின் அடிப்படையை, அதனால் தான் கூறினேன், நாற்பது வயது மேலுள்ளவர்கள் இதை படிக்க வேண்டாம் என்று.

எனக்கும் உனக்கும் மற்றும் இதை வாசிக்கும் அனைவருக்கும் மட்டும் தான் செக்ஸ் உணர்வு உள்ளது என்று தப்பு கணக்கு போட்டு கொண்டிருந்தேன். ஆனால்,, என் அறையில் உள்ள பல்லி, பாச்சான், பூரான், பாம்பு மற்றும் கொசு முதற்கொண்டு ‘அதை’ கடமையாக செய்து கொண்டிருக்கும் போது, நான் அவைகளை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் போது, நான் அவைகளாக பிறந்திருக்கலாம் என்று எண்ணும் போது எழுந்த சிந்தனையின் ஆராய்வின் முடிவாக கூட இது இருக்கலாம்.

என் வீட்டில் இருக்கும் ஒரு மாமரத்தை கேட்கிறேன், நீ எப்படி இனப்பெருக்கம் செய்கிறாய் என்று, அது சிரித்து கொண்டே கூறுகிறது, அது எளிதானது தான், உனக்கு சுவையாக ஒரு பழத்தை தயாரித்து கொடுத்து, அதன் நடுவில், சுவையில்லாத என் விதையை வைத்து அனுப்புகிறேன், நீ பழத்தை தின்று விட்டு விதையை தூக்கி எறிந்து விடுகிறாய், ஏணென்றால் என் விதை உனக்கு ருசியாக இல்லையென்பதால் தான். அதை அவ்வாறு தயாரித்தது நான் தான், நீ உனக்கு லாபமாக என்னை பார்க்கிறாய். நான், என் இனத்தை பெருக்கி கொள்ள ஒரு வாய்ப்பாக உன்னை பார்க்கிறேன், நீ மட்டுமல்ல எனக்கு அடிமையாக பல உயிரனங்கள் உண்டு என் நோக்கம் ஒன்று தான், என்னை இவ்வுலகம் முழுதும் பரப்ப வேண்டும் என்பது மட்டும் தான். அதற்காக உன்னை மட்டுமல்ல இன்னும் பல உயிரினங்களை உபயோகித்து கொள்கிறேன்.

அதற்கு மேல் அம்மரத்திடம் பேச விருப்பமில்லை. அடுத்ததாக என் கண் முன்னே பறந்து சென்ற ஒரு சிறு வண்டை கவனித்தேன், அது ஒரு மலர் மீது சென்று அமர்ந்தது, அதனிடம் பேச விரும்பி, மெதுவாக அதனிடம் சென்றேன், என்னை கவனித்து விட்ட அவ்வண்டு சட்டென தன் இறக்கை விரித்து கண்ணிமைக்கும் நேரத்தில் கலைந்து விட்டது, இப்போது அவ்வண்டு அமர்ந்திருந்த மலர் என்னை முறைத்து பார்ப்பதை கவனித்து விட்டேன். எதற்காக என்னை முறைக்கிறாய், நான், உன்னை அந்த வண்டிடம் இருந்து காப்பற்றி இருக்கிறேன். என்னை நீ பாராட்ட வேண்டும் என்று கூறி முடிப்பதற்குள்,, அம்மலர் என்னை நோக்கி தொண்டை கிழிய கத்த ஆரம்பித்தது.

“அடே மூடா.. என் வாழ்க்கையை கெடுத்து விட்டாயே, நீ நல்ல இருப்பியா.. “
திகைப்பில் நான் அழ்ந்திருந்த போது....சிறிது நேர அழுகைக்கு பிறகு அதுவே கூறத் தொடங்கியது...

என்னிடம் தேன் சுவையாக இருக்கிறது, தேனை எடுப்பதற்காக ஒரு வண்டோ அல்லது பூச்சியோ, என் மீது அமரும் போது, நான், ஏற்கனவே தயாரித்து வைத்திருந்து மகரந்த தூள்கள் அப்பூச்சியின் காலில் ஒட்டிக் கொள்கிறது, அடுத்த மலரிடம் அந்த பூச்சி செல்லும் போது அதன் காலில் ஒட்டியிருக்கும் மகரந்த தூள் அங்கு விழுந்து விடுகிறது, இது தான் ஒரு செடியின் இனப்பெருக்கத்துக்கு தேவை. அதையும் கெடுத்து விட்டாயே பாவி...
ஒரு மலர் அழுததை அப்போது தான் பார்த்தேன். பெரிதாக அலட்டிக் கொள்ளவிள்ளை. அன்று தான் முழுதாக மழை நனைத்திருந்தது பூமியை, ஆதலால், என் வீட்டினுள் சிறு குட்டை தேங்கி விட்டது சென்னை மா நகராட்சியின் அலட்சியத்தால்... ஆனால், அக்குட்டையில் தேங்கி நின்ற தண்ணீரில், நான் கவனித்து விட்டேன் அத்தவளைகளை. கூட்டம் கூட்டமாக கத்திக்கொண்டிருந்தன, ஒரே ஒரு தவளை மட்டும் அமைதியாக இருந்ததை நான் அவதானித்து விட்டேன், என் அவதானிப்பை அதுவும் அவதானித்து விட்டு என்னை நோக்கி மெதுவாக நகர்ந்து வந்தது.. நான் பேச முற்படும் முன் அதுவே பேச தொடங்கியது, எதற்காக நாங்கள் இவ்வளவு சத்தம் எழுப்புகிறோம் என்று தானே யோசித்து கொண்டு இருக்கிறாய்.. பதிலை நானெ கூறுகிறேன்

“ஆண் தவளைகள் மட்டுமே அந்த சத்தங்களை எழுப்புகின்றன. ஒரு பெண் தவளையானது, சத்தம் எழுப்பி கொண்டிருக்கும் ஆண் தவளைகளை உன்னிப்பாக கவனிக்கிறது, எந்த தவளை, கடைசி வரை, இடைவிடாமல் முழு ஆற்றலோடு சத்தம் எழுப்புகிறதோ அந்த தவளையை தேடி சென்று இனப்பெருக்கம் செய்கிறது. மற்ற தவளைகள் ஒதுங்கி கொள்கின்றன.. இனப்பெருக்கத்துக்காக தான் இவ்வளவு ஆற்றல் வீணாகி கொண்டிருக்கிறது.. வேறொன்றுமில்லை..,இனப்பெருக்கத்தை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். திறமையுள்ள ஆண் தவளையின் ‘ஜீன்’ மட்டுமே இங்கே பரப்பப்படும். அத்ற்கு தான் இத்தனை சோதனைகள், எங்கள் இனம் தொன்று தொட்டு வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். சிறப்பாக வளர வேண்டும். திறமையுள்ள சகல கலா ‘ஜீண்’கள் மட்டுமே இங்கு பரப்ப படவேண்டும், ஆதலால், எங்கள் இனத்தை விருத்தியாக்கும் உரிமை பெண்களிடம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களை மாதிரி பெண்ணடிமைத்தனத்தை நாங்களும் ஆதரித்திருந்தால் என் இனம் அழிந்து விடும் முட்டாள் மானிடா... ஒரு பூவிடம் இருக்கும் தேன் போன்றது தான் செக்ஸ். பூவில் இருக்கும் தேன் ருசியாக இல்லையென்றால் எந்த வண்டும் தேனீயும் அதன் அருகில் கூட போகாது. அதன் சந்ததி அழிந்து போய்விடும் அதே தான் அனைத்து உயிருக்கும் உள்ள சூட்ச்சமம், செக்ஸ் என்பது ஒரு இயற்கை பொறி, இவ்வுயிர் தன்னை அழிந்து கொள்ளாமல் பாதுகாக்க விரும்பி, உக்காந்து யோசிச்சு உருவாக்குன விஷயம் தான் செக்ஸ் எனப்படுவது.... "

மூச்சிறைக்க பேசி விட்டு குட்டைக்குள் குதித்து மறைந்து விட்டது அந்த தவளை... ஒரு சில நிமிட் இடைவேளிக்கு பிறகு மேலே வந்த அத்தவளை, மீண்டும் ஒரு முறை உரக்க கத்தியது

‘சகல கலா ஜீன்ஸ்’ (The Ultimate Genes) என்பது தான் செக்ஸின் நோக்கம்.

(தொடரும் )

Thursday 31 May 2012

கடவுள் இருக்கிறாரா- விஞ்ஞான விளக்கம்

டவுள் இருக்கிறாரா இல்லையா. அனைத்து விஞ்ஞானிகள் முன்னும் வைக்கப்படும் இறுதி கேள்வி இதுவாகத்தான் இருக்க முடியும். பெரும்பாலானோர் கடவுளை விளக்க முனைவதில்லை, மறுதலிக்கவும் மறுக்கவில்லை. கடவுளும் ஆன்மீகமும் வெவ்வேறு பாதையில் பயனிப்பதாகத்தான் அனைவரும் பார்க்கிறார்கள். ஆனால் அறிவியல் ரீதியாக கடவுளை விளக்க முடியாது என்ற கூற்று அபத்தமானது. அறிவியலில் அனைத்திற்கும் விடை இருக்கிறது, இந்த பதிவை படித்து முடித்தவுடன் உட்க்கார்ந்து யோசித்து பார்க்கவும்.

இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் சர் ஐசக் நியுட்டன் வகித்து வந்த பேராசிரியர் பதவியை சில வருடங்கள் முன்னர் வரை வகித்தவரும், தற்கால இயற்பியலில் பெரும்பங்கு ஆற்றிக்கொண்டிருக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்க் (Stephen Hawking) தன் புத்தகமான “தி க்ராண்ட் டிசைன்” (The Grand Design) மூலமாக ப்ரபஞ்ச உருவாக்கதின் அடிமட்ட தேவைகளை எடுத்து கூறி கடவுளை நேரடியாக விமர்சிக்கிறார். புத்தகத்தின் சில பக்கங்களை மட்டும் மொழிப்பெயர்த்துவிட்டு தொடர்வோம்:

“இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது தான் என் முழு நேர சிந்தனை, அதில் வெற்றியும் கிடைத்து இருக்கிறது . எளிதாக விளக்க முனைகிறேன், சிறிது கற்பனை குதிரையை தட்டி விட்டால் நீங்களும் வெற்றி பெறலாம்...

வானத்தை தினமும் பார்க்கிறோம், பூமியில் இருந்து மேல் நோக்கி சென்றால் வானத்தை தொட்டு விடலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் அறியாமையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம், அது ஒரு 'முடிவில்லாத' வெட்டவெளி (space), சூரியனில் இருந்து வரும் 'ஒளி' சிதறுவதால் மட்டுமே அந்த வெட்ட வெளி நமக்கு நீலமாக (Blue) தெரிகிறது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.
பெருவெடிப்பு (Big bang, which is the origin of universe) நடப்பதற்கு முன்னர், "ஏதுமற்ற நிலை" தான் இருந்தது, அதாவது, கண்களை மூடி கொண்டு பார்ப்பதை போல தான்..... 'ஒன்றுமில்லை' என்ற நிலை, வெளி (Space) என்ற ஒன்று கூட கிடையாது (கற்பனை செய்து கொள்ளவும்).

பெருவெடிப்பு நடந்த அந்த நொடி தான் காலத்தின் (Time) ஆரம்பம், ஆற்றலோ அல்லது பருப்பொருளோ (Energy or mass, since both are inter-related) வெடித்து சிதறியது தான் அந்த நிகழ்வு. இது வரை அனைவரும் அறிந்தது தான், ஆனால், உங்களுக்கு ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன், வெடித்து சிதறிய தூசுகள் (அணுக்களின் கூட்டம்) சீரான இடைவெளியில் (equal distance) பரவி இருந்திருந்தால் இந்த பிரபஞ்சம் உருவாகி இருக்காது. 
 வெடித்து சிதறிய தூசுகள் 'ஒழுங்கற்ற' நிலையில் (dis-ordered state) சிதறியதால் மட்டுமே இப்பிரபஞ்சம் உருவாகியது..

காரணம்... இந்த வெட்ட வெளியில் இருக்கின்ற ஒவ்வொரு அணுவிற்கும் ஈர்ப்பு விசை உண்டு. தூசுகள் (அணுக்களின் கூட்டம் ) , சீரான இடைவெளியில் பரவி இருந்தால், ஈர்ப்பு விசையினால் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்காது, இந்த பிரபஞ்சமும் உருவாகி இருக்காது...நீங்களுமில்லை.. நானுமில்லை. நான் சொல்ல வருவது ஒன்று தான், ஒழுங்கற்ற நிலை தான் இப்பிரபஞ்சத்தை உருவாக்கி இருக்கிறது. என் கேள்வி என்னவென்றால், கடவுளிற்கு இங்கு என்ன வேலை ??. 'ஆற்றல்' என்று நாம் விஞ்ஞானத்தில் வருவிக்கப்பட்டது (Derived) தான் கடவுள் என்பதை நாம் ஏன் உணரவில்லை ???. கடவுள் என்ற கோட்பாடை நாம் ஏன் கொலை செய்கிறோம் ??.
ஆனால், அனைவராலும் தடுக்க முடியாத கேள்வி. அதெப்படி ஏதுமற்ற ஒன்றில் இருந்து ப்ரபஞ்சம் உருவாகியது ??
இதற்கும் பதில் வைதிருக்கிறது அறிவியல்..

இயற்பியலில் சிறிது பின்னோக்கி நியூட்டன் வாழ்ந்த காலத்திற்கு செல்வோம். நியூட்டனின் கணிப்பு படி, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும், கிரகங்களும் கனகச்சிதமாக தங்களின் பாதைகளில் சுழன்று கொண்டு இருக்கின்றன, சுழன்று கொண்டு தான் இருக்கும். ஆனால், காலபோக்கில் விஞ்ஞானத்தின் பிடியில் நியூட்டனின் கணிப்பு பொய்த்தது. அது வரை இருந்த அறிவியலின் பார்வை மாறியது. 'classical physics' என்று அது வரை இருந்த தத்துவங்களுக்கு பெயர் வைத்து மூடிவிட்டார்கள்.

அவர்கள் கண்டுபிடித்தது என்னவென்றால், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒன்றை விட்டு ஒன்று விலகி செல்கிறது, உதாரணம், சூரியனை பூமி சுற்றுகிறது, ஆனால், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள இடைவெளி சிறிது சிறிதாக கூடிகொண்டே போகிறது. இந்த விலகல் தொடர்ந்து கொண்டே இருக்கும். எது வரை தொடருமென்றால் ஒவ்வொரு அணுவும் தனித் தனியாக பிரிந்து அழிந்து போகும் வரையில். இறுதியில், ஏதுமற்ற நிலை என்று ஆரம்ப நிலைக்கே இந்த பிரபஞ்சம் சென்று விடும் என்பது அறிவியலின் கருத்து. இது நியூட்டன் அறிந்திராதது. 

விரிவாக தெரிந்து கொள்ள பிக் ரிப் (Big Rip) என்று விக்கிபீடியாவில் தட்டவும். உயிரினங்கள் மட்டுமே இறந்து போகும் என்று நினைக்காதீர்கள், இந்த பிரபஞ்சமே ஒரு நாள் இறந்து போகும். அறிவியலின் கணக்குகளை வைத்து எப்பொழுது அழிந்து போகும் என்று கூட கண்டுபிடித்து விட்டார்கள். 'Quantum physics' என்று இயற்பியல் பிரிந்த பொழுதில் தான் கடவுளை பற்றிய கேள்வி எழுந்தது. (இங்கு அதை நான் விளக்கவில்லை)
இந்த அனைத்து கண்டுபிடிப்புகளுடன், டார்வினின் தத்துவங்களை பொருத்தி பார்த்தால் கடவுளை ஓரளவுக்கு தொட்டு விடலாம். தான் வாழ்கின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ப, காலப்போக்கில், தன் உடலை மாற்றி கொள்ளும் திறமை ஒவ்வொரு உயிருக்கும் இருக்கிறது என்பது தான் டார்வினின் கண்டுபிடிப்பு.

எனது தாழ்மையான கருத்து என்ன வென்றால்.. தனகென்று ஒரு உடலை, தானாக அமைத்து, தானாக பரினாமித்த, 'உயிர்' தான் கடவுள். உயிருள்ள அனைத்தும் கடவுள். இதை தவிர வேறு எங்கு கடவுள் இருக்க முடியும்???. வாழ வேண்டும் என்பது மட்டுமே அதன் நோக்கம். ஒரு உயிருக்கு தீங்கு நினைப்பவன் கடவுளை கொலை செய்கிறான். இந்த அறிவு மிருகங்களுக்கு கிடையாது. சில மனிதர்களுக்கும் கிடையாது. நாம் வாழ சில உயிரினங்களை கொல்வது (தாவரங்கள் மற்றும் சிக்கன்கள்) எதனாலென்றால், நாம் பரிணாமத்தின் உச்சத்தில் இருக்கிறோம். இந்த கொலைகளை செய்யாமல் நாம் உயிர் வாழமுடியாது. கடவுள் என்ற வார்த்தை காலப்போக்கில் திரியபட்டு அறியப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்....

Tuesday 29 May 2012

ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம்

 ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் தத்துவம் தான் இது வரை மனிதர்கள் கண்டுபிடித்தவைகளில் சிறந்தது, சமன்பாடுகளின் (Equations) வழியில் புரிந்து கொள்ள கடினமானதும் கூட. ஆனால் அதன் சாராம்சம், ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது. டைம் மெஷின் (கால இயந்திரம்) என்ற சிந்தனை பிறந்தது இதன் முடிவுகளில் இருந்து தான். நம்மால் எதிர் காலத்துக்கு செல்ல முடியுமா ??. இயற்பியலின் விதிகளின் படி பார்த்தால், கண்டிப்பாக முடியும். 

ஒரு சின்ன கற்பனை கதையை நான் கூறுகிறேன்.


 நான் இந்த பூமி பந்தை சுற்றியவாறு ஒரு தண்டவாளம் அமைக்கிறேன், என்னுடைய ரயிலை ஓட்டுவதற்காக, அதாவது, சென்னையில் கிளம்பி, பூமியை ஒரு முறை சுற்றி விட்டால், மீண்டும் சென்னைக்கே வந்து விடுவேன்,



ஆனால் இந்த ரயிலில் நான் மட்டுமே பயணிக்க போகிறேன். எனது ரயில் அதிவேகமானது, ஒளியின் வேகத்தில் என்னால் பயணிக்க முடியும், அதாவது, ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் வேகத்தில் என்னால் பயணிக்க முடியும்.

நான் ரயிலை கிளப்புவதற்கு முன்னர், ஒரு கடைக்கு சென்று இரண்டு கடிகாரங்கள் வாங்குகிறேன், இரண்டும் ஒத்த பண்புடையவை ஒரே மாதிரி தான் செயல் படும். 

அதில் ஒன்றை உங்களிடம் கொடுத்து விடுகிறேன், மற்றொன்றை என் ரயிலில் வைத்து விடுகிறேன். நீங்கள் உங்கள் வீட்டில் தான் இருக்க போகிறீர்கள். நான் எனது வண்டியை கிளப்பும் போது, சரியாக இரண்டு கடிகாரங்களையும் இயக்க வேண்டும். 

"இப்போது எனது வயது 26. நான் எது வரை பயணிக்க போகிறேன் என்றால், எனது கடிகாரத்தில் 50 வருடங்கள் ஓடி முடியும் வரை. வெற்றிகரமாக என் பயணத்தை முடித்து விட்டு பூமியில் நான் கால் வைக்கும் போது எனக்கு வயது 76. இப்பொழுது நான் உங்களை தேடி உங்கள் வீட்டிற்க்கு சென்றால், எனக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஏனென்றால், நீங்கள் இறந்து ஏறத்தாழ 500 வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கும்."

இது தான் உண்மை. நேரம் என்பது நீங்கள் பயணிக்கும் வேகத்தை சார்ந்தது, வேகம் கூடினால் நேரம் சுருங்கும், சாதாரணமாக நாம் உணரும் ஒரு ஐந்து நிமிடம் என்பது அங்கு ஒரு நொடியாக நாம் உணரலாம். நேரம் மட்டுமல்ல, நீங்கள் வேகமாக செல்லும் பொது உங்களை சுற்றி இருக்கும் வெளி (Space) சுருங்கும், உங்களை மேற்கொண்டு செல்ல விடாதவாறு சுருங்கும், மற்றும், உங்களின் எடை பன்மடங்காக உயரும்.


நீங்கள் நிலையாக இருக்கும் போது தனுஷ் எடையில் இருந்தால், ஒளியின் வேகத்தில் பயணிக்கும் பொது இளைய திலகம் பிரபுவின் எடையை அடைந்து விடுவீர்கள். 

நாம் பூமியின் மீது ஒட்டிக்கொண்டு, அதன் வேகத்தில் சென்று கொண்டிருப்பதால், நாம் உணரும் நேரம், எடை, வெளியின் அழுத்தம் ஒரே மாதிரியாக இருக்கிறது. மொத்தத்தில், இவை அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தது (அதனால் தான் இது சார்பியல் தத்துவம்). வேகம் கூடினால் எதிர்காலதிற்கு செல்லலாம். ஆனால் வேகத்தை குறைத்து கடந்த காலத்திற்கு செல்வது சாத்தியமில்லை.

'கால(ய)மே' இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா!

Tuesday 1 May 2012

சுறாக்குருவி - சிறுகதை


"நான் அடிச்சா தாங்க மாட்ட… நாலு மாசம் தூங்க மாட்ட…" குருவியின் மொபைல் ஃபோன் தொடர்ந்து பத்தாவது தடவையாக அலறியது.

"டே.. யாருடா அது கேப்பே விடாம கால் பண்றது.. சைலன்ட்லயாவது போட்டு தொல டா.. ஒரு வேலய கூட ஒழுங்கா பார்க்க முடியல.."

பொங்கலுக்கு வெளியாகும் தன் தலைவரின் படத்தை புகழ்ந்து வசனம் எழுதி கொண்டிருந்த புண்ணியகோடி. உலகத்தின் அதிமுக்கியமான வேலையை செய்து கொண்டிருப்பது போல கூறினான்..

"எங்க வீட்ல இருந்து தான் மச்சான் கால் பன்றாங்க.. மதியம் தான் வருவேன்னு சொல்லிட்டு தான் வந்தேன்.. இப்ப எதாவது மொக்க வேலயா இருக்கும் அதுக்கு தான் கால் பன்னுவாங்க..".

"சரி.. அத சைலன்ட்ல போட்டுட்டு தலைவர புகழ்ந்து எதாவது புதுசா வசனம் யோசி. இன்னைக்குள்ள ஃப்ளெக்ஸ் பேனரு எல்லாம் அடிச்சு முடிக்கனும், போன தடவ மாதிரி லேட் ஆகிட கூடாது மாமா. இப்பவே மணி 10... கட்-அவுட் வேற கட்டனும்.. சீக்கிரம் எதாவது யோசிச்சு சொல்லு.." 

செயற்கை கோளை பறக்க விடும் விஞ்ஞானி  மாதிரி சிந்திக்க தொடங்கினர் இருவரும்.
 
மதியம் மணி 3

வீட்டிற்குள் நுழைந்த குருவி..

"எதுக்குமா அத்தன தடவ கால் பன்ன..?? நான் இன்னைக்கு பிஸினு சொல்லிட்டு தான போனேன்."

"உங்கப்பா பெட்ரோல் காலியாகி நடு வழில நிக்குறாருனு கால் பன்னா தொர ஃபோன எடுக்க மாட்டீங்களோ.. அந்த மனுஷன் ஒரு மணி நேரம் நடயா நடந்து போனாரு டா.., உன்னையெல்லாம் புள்ளயா பெத்து அவருக்கு என்ன பிரயோஜனம்..." வரிந்து கட்டுவது குருவியின் தாய்.
 
"வண்டி எடுக்குறதுக்கு முன்னாடியே அதெல்லாம் பார்க்கணும்." குருவி
 
"உனக்கு தெனமும் செலவுக்கு காசு குடுத்து உன்ன வீட்ல உக்கார வச்சு சோறு போட்டு வளக்குறார்ல..... இதுக்கு மேலயும் பேசுவ நீ... உங்க அண்ணன பாரு டா... படிச்சு முடிச்சு நல்ல வேலைல சேர்ந்து கொழந்த குட்டினு செட்டில் ஆகிட்டான்.... நீ பி.எஸ்ஸி படிச்சு முடிச்சுட்டு வெட்டியா சுத்திக்கிட்டு இருக்க.."

"எனக்கும் கல்யாணம் முடிச்சு வச்சு பாருமா.. நானும் கொழந்த குட்டினு செட்டில் ஆய்டுவேன்.."

"உனக்கு எவன் பொண்ணு கொடுப்பான்..."

"நான் அண்ணன் மாதிரி இளிச்ச வாயன் இல்லமா... அதெல்லாம் நாங்களே ஒரு பொண்ண தேடிக்குவோம்... சரி... ரொம்ப பசிக்குது காலைல இருந்து சாப்பிடல.. போய் சாப்பாடு போடுமா.. நெறய வேல இருக்கு..."

"சாப்பாடு இனிமேதாண்டா பன்னனும்... ஒரு மணி நேரம் பொறு..
ஒரு மணி நேரமா... ஏம்மா உனக்கு அத விட வேற என்னமா வேல இருக்கு.. எனக்கு இப்பவே நேரமாய்டுச்சு நெறய வேல இருக்குமா..."

"ஆமா... பெரிய கலக்டர் வேல. அந்த வெட்டி பசங்க கூட சேர்ந்து தெரு தெருவா போஸ்டர் ஒட்ட தான போற..."

"உனக்கொன்னும் தெரியாது.... விடு, நான் வெளிய சாப்டுக்குறேன்... நான் நேத்தைக்கே கேட்டேன்ல அந்த 1000 ரூவா குடு..."

"எந்த பணத்த நான் வச்சுருக்கேன்.. உங்க அப்பா எனக்கொண்ணும் குடுக்கல உனக்கு கால் பன்னேன் நீயும் எடுக்கல...."

குருவிக்கு கடுங்கோபத்தை கிளப்பி விட்ட வார்த்தைகள் இவை..

"உங்கிட்ட நேத்து எத்தன தடவ சொன்னேன்... ஏம்மா இப்படி இருக்க ஃப்ளெக்ஸ் கட்-அவுட்டு எல்லாத்துக்கும் நான் காசு குடுக்கனும்மா.. இல்லனா மன்றத்துல என்ன மதிக்க மாட்டாங்க..."

முதல் செமெஸ்டரில் ஐந்து பாடங்களிலும் ஃபெயில் ஆகி வாஷ் அவுட் ஆன போது கூட குருவி இவ்வளவு ஆதங்கப் படவில்லை..

"ஆமடா... அவுங்க மத்திக்கலனா நம்ம வீட்ல சோறு பொங்க முடியாது பாரு. உங்க அப்பா எத்தனயோ ஜோஸியக்காரன் ஜாதக்காரனெல்லாம் பார்த்து அழகா குரு விநாயக்னு பேரு வச்சாரு. அந்த பேர இப்புடியாடா மாத்துவ. உன்ன எல்லாரும் குருவி குருவினு கூப்புடுறத கேட்டு உங்கப்பா தெனமும் எவ்வளவு கஷ்ட பட்றாரு தெரியுமா..."

"இதெல்லாம் இப்ப ரொம்ப முக்கியமா. காசு தருவியா மாட்டியா..."

"எங்கிட்ட இல்லடா..."

"அதெல்லாம் நெறய இருக்கும், எடுத்து குடு..."

"உங்க தலைவர் சம்பாதிச்சு நம்ம வீட்டுக்கு தான மணி ஆர்டர் அனுப்புறாரு... ஏண்டா இப்படி தொல்ல பண்ற. எங்கிட்ட இல்லடா..."

"நீ காசு தரலனா இனிமே வீட்டு பக்கமே வரமாட்டேன் மா..."

"போ.. போ.. உங்க தலைவர் உனக்கு தெனமும் சோறு போடுவாரு."

"நான் உங்கிட்ட நெறய தடவ சொல்லிருக்கேன், என்னப் பத்தி எவ்வளவு கேவலமா பேசுனாலும் நான் பொறுத்துக்குவேன், ஆனா எங்க தலைவர பத்தி தப்பா பேசுன கடுப்பாயிடுவேன்..."

"எத்தன தடவ நான் சொல்றது, எங்கிட்ட காசெல்லாம் இல்லடா, கொஞ்ச நேரம் பொறு சாப்பாடு ரெடி பன்றேன் சாப்பிட்டு போ.."

"நீயும் உன் சாப்பாடும்... மனுஷன் சாப்பிடுவான இந்த வீட்ல.. இனி இந்த வீட்டுக்கு வந்தா என்ன என்னடா நாயேன்னு கேளு..."

கோபத்தில் பக்கத்தில் இருந்த ஒரு டேபிளிற்கு எட்டி ஒரு மிதி குடுத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினான் குருவி..

மாலை மணி 4

வீட்டில் வீராப்பாக சண்டை போட்டு விட்டதால் பைக்கை எடுக்காமல் நடந்தே தியேட்டர் வரை வந்து விட்டதன் விளைவு அப்போது தான் உச்சி மண்டையில் உரைத்தது குருவிக்கு.. பசி.. பசி.. பசி… என்று வயிறு தன் தேவையை மூளைக்கு அவசர கதியில் அனுப்பி கொண்டிருப்பது நன்றாக தெரிகிறது, கொஞ்ச நேரம் பொறுத்து கொள் உனக்கொரு ஃபுல் மீல்ஸ் + இரண்டு ஆம்லேட்டுகள் பரிசாக அளிக்கிறேன் என்று தன் மூளை அதற்கு ஆறுதல் கூறுவதையும் உணரமுடிகிறது.   

தியேட்டர் வாசலில் கட்-அவுட் கட்டி கொண்டிருக்கும் தன் நன்பர்களை பார்த்த விட்ட அந்த நொடி சந்தோஷம்…. இது வரை அவர்கள் ஓசியில் சரக்கு வாங்கி குடுத்த போது கூட இப்படி ஒரு சந்தோஷம் கொப்பளிக்கவில்லை குருவிக்கு..

"மச்சான் குருவி வந்துடான் டா..." தூரத்தில் இருந்தே தன்னை பார்த்து விட்டு காளி கத்தியது கூட மெதுவா தான் கேட்டது..

"மாமா.. உன்ன தாண்டா தேடிக்கிட்டு இருந்தோம்… ஃப்ளெக்ஸ் பேனர் எல்லாம் வாங்க போகனும். எல்லாரும் காசு குடுத்துடாங்க… ஒரு 2000 ரூவா கொறயுது.. நீ ஒரு 1500 ரூவா குடு மாமு மத்தத கடக்காரன்ட்ட பேசியே பூசி மொழுவிடுவோம்..." மன்றத்தலைவர்  புண்ணியகோடி  

"மச்சான்... வீட்ல சண்ட போட்டுட்டு வந்துடேன் டா... பணம் எதுவும் வாங்கல..." பசியை மறைத்து பதில் சொன்னான் குருவி

"டே மச்சான் என்னடா பொறுப்பே இல்லாம பேசுற. இதுல நீ மன்றப் பொருப்பாளர் பதவி வேற கேக்குற...இப்ப எங்கடா போய் பணம் ரெடி பன்றது. இங்க எவங்கிட்டயும் காசில்ல டா, எல்லாத்தையும் ஏற்கனவே தேத்தியாச்சு…. நாளைக்கு தலைவர் படம் ரிலீஸ் ஆகுதுனு தெரியும்ல... உன்ன யார்ரா வீட்ல சண்ட போட சொன்னது..." சிவகாசி பட்டாசாக வெடித்தான் புன்னியக்கொடி.

"மாமு எங்க வீட்ல்யும் தான் ரெண்டு நாளா செம கிழி விழுகுது.. நான் என்ன சண்ட போட்டுட்டா வந்தேன். இடம், பொருள், ஏவல் அறிஞ்சு தான் மாமு சண்ட போடனும்..." இது காளியின் இடைச்சொருகல்.

"இல்ல மச்சான்.. வீட்ல சண்ட போட்டு காலைல இருந்து சாப்புடல டா... செம பசி..."

"நான் கூட தான் காலைல இருந்து சாப்பிடல, தெம்பா வேல செய்யலயா. எவ்ளோ வயசான ஆளு அண்ணா ஹஸாரே ஒரு மாசத்துக்கு மேல சாப்பிடாம இருக்காரு. இதெல்லாம் பழகிடும் மச்சான்..." இயல்பாக கூறினான் காளி

"அதில்ல மச்சான்…. ஒரு நூறு ரூவா இருந்தா…. " குருவி எதோ சொல்ல முயன்ற போதே

"சரி விடு மாமா… எப்படியாவது ரெடி பன்னிடலாம்… முதல்ல போய் பேனர் வாங்கிட்டு வர்றோம்…"

காளி மற்றும் இன்னும் சிலரை தள்ளிக்கொண்டு கிளம்பிய புன்னியக்கொடி சிறிது தூரம் சென்றுவிட்டு திரும்பிப் பார்த்து குருவியிடம்..

"மாமா.. போஸ்டர்ல அடிக்க இன்னும் வசனம் ரெடியாகல… ஏதாவது யோசிச்சுவை."

இது வரை எத்தனயோ தருனங்களில், தான் அழ வேண்டி கண்கள்  விரும்பிய போது கூட பூத்திடாத கண்ணீர் இன்று மெலிதாக தன் முகவரி காட்டியது குருவிக்கு... காரணம், அகோரப்பசியும் அதை அலட்சித்த நண்பர்களும்.. 

எவ்வளவு திட்டினாலும், திட்டு வாங்கினாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தனக்கு பிடித்தவைகளை மட்டும் தனியாக சமைத்து போடும் தன் தாயின் அன்பு தான் இப்போது குருவியை நிறைத்திருந்தது, கண்கள் இப்போது வெகுவாக கலங்கியது. 

தன்னை சுற்றி நடப்பவைகளை கூர்ந்து கவனித்தான். கேள்விகள் மனதை ஆக்கிரமிக்கிறது..

எதற்காக இப்படி கட்-அவுட், போஸ்டர் எல்லாம்... எதுக்காக நாம் ஒரு நடிகனுக்கு ரசிகனாக இருக்கிறோம்..???

நாம் இப்படி தான் இருக்கவேண்டும் என்று நமது மனதில் ஒரு கற்பனை இருக்கிறது, அதையே ஒருவன் செய்து, நாம் பார்க்கும் போது அவன் நம்மை வெகுவாக கவர்கிறான். ஆனால், இதெல்லாம் வெறும் நடிப்பு தானே. நடிப்பு என்பது அப்படியொன்றும் கடினமான காரியமில்லையே... நாம் இயல்பாகவே பல தருணங்களில் நடிக்க தானே செய்கிறோம்... ஒரு வேளை, யாரோ ஒருவருக்கு நம்மை ரசிகராக அடையாளப்படுத்துவது தான் நம்மை தொடர்ந்து இயக்குகிறதா.

இவ்வளவு பணம் செழவழித்து போஸ்டர், பேனர் எல்லம் செஞ்சு வைக்கிற காசுல, 100 பேருக்கு ஒரு வேளை சாப்பாடு இலவசமா போடலாமே.. எத்தன பேர் இந்த நேரத்துல பசில இருப்பாங்க.. ச்ச்ச.,, எவ்ளோ பெரிய முட்டாள் தனத்த செஞ்சுட்டு இருக்கோம்.. ஒரு வேள நம்மள மாதிரி ஆளுங்களுக்காக தான் முட்டாள்கள் தினம் கொண்டாடுரான்களோ??!! 

“தனியொரு மனிதனுக்கு உணவில்லையென்றால் ஜகத்தினை அழித்திடுவோம்” இந்த வரிகளை பாரதி எழுதிய போது கண்டிப்பாக கடும்பசியில் தான் இருந்திருப்பார்.. இல்லையெனில் இப்படி ஒரு ஆத்திரம் அவருக்கு வந்திருக்காது. மகாகவியின் வரிகள் இப்போது தான் புரிந்தது..

இந்த ஒரு நாள் பசி அவனுக்கு ஒரு போதி மரம் போல் ஆனதாகவே உணர்ந்தான்.

அவன் இது வரை வாழ்ந்த வாழ்க்கையை ஒரு சில நொடிகளில் மனக்கண்ணில் திரையிட்டு பார்த்தான்..

முக்கியமாக கல்லூரி வாழ்க்கை..

ஒரே செமெஸ்டரில் 24 அரியர் பேப்பர்களை பிட் அடித்து பாஸ் செய்த சாதனைக்காக ஒரு முறை நன்பர்களுக்கு ட்ரீட் குடுத்த போது, ஒரு முறை ஜூனியர்களை ராகிங்க் செய்து ரெண்டு நாள் தொடர்ந்து ட்ரீட் வைக்க வைத்த போதும் கூட "மச்சான் உங்கிட்ட நெறய தெறமைகள் ஒளிஞ்சு கெடக்கு.. நீ கண்டிப்பா பெரிய ஆளா வருவ" என்று கூறிய நண்பர்கள் அனைவரும் இன்று நல்லதொரு வேலை, அழகான வீடு, சுமாரான மனைவி என்று செட்டில் ஆகி விட்டனர். என்னுடனான தொடர்பையும் அத்து விட்டனர்...

இனியும் நான் திருந்தவில்லையென்றால் நான் மனிதனே இல்லை...
நான் மட்டுமல்ல... நண்பர்களும் திருத்த வேண்டும்..

தீர்க்கமான முடிவுடன், தெளிந்த சிந்தனையுடன் வீட்டிற்கு கிளம்ப யோசித்த வேளையில்... காளி தன் பழைய யமஹா க்ரக்ஸில் வந்திறங்கினான்...

"மாமா.... பேனர் ரெடி ஆய்டுச்சு.... இன்னும் ரெண்டு மணி நேரத்துல கட்டி முடிச்சுரலாம்.... இன்னும் போஸ்டர் மட்டும் தான் பாக்கி.... அதையும் நைட்டுக்குள்ள ஒட்டி முடிச்சுரலாம்.. நாளைக்கு வெய்ட்டு காட்டிருவோம்." குதூகலித்தான் காளி.

"எனக்கு உடம்பு சரியில்ல மச்சி... நான் வீட்டுக்கு கிளம்புறேன்..." குருவி

"டே... நீ பசியா இருக்கன்னு சொன்னதால தான் எங்க அப்பா பாக்கெட்ல இருந்து 200 ரூவா அடப்பு போட்டு வந்தேன்,, மச்சான் ஆழ்வார் ஹோட்டலுக்கு போறோம் ஆளுக்கொரு கொத்து சாப்புடுறோம்.."

காளியின் வார்த்தைகள் பீராக பாய்ந்தது குருவியின் காதுகளில்...

ஆழ்வார் ஹோட்டல் சுக்காவும் பரோட்டாவும் எவ்வளவு ருசியானது.. அதுவும் பசியில்.. ஆஹா.. உடல் முழுவதும் உமிழ் நீர் சுரப்பதாக உணர்ந்தான் குருவி.. அது வரை என்ன சிந்தித்தோம் என்பது சிந்தனையில் எழ சிறிதுக்கூட அனுமதிக்கவில்லை பசி.. 

ஆழ்வார் ஹோட்டல்.. மணி ஐந்து..

“பசி ருசியறியாதுன்னு எந்த கேனக்காத்தான் சொன்னது” கொத்து பரோட்டாவை கொத்து கொத்தாக உள்ளே தள்ளிய குருவியின் நினைவலைகள்.. 

"மாமா... புண்ணியகோடி உன் மேல செம கடுப்புல இருக்கான்.. எதாவது பேசி சமாளி.." கை கழுவும் வேளையில் அலாரம் அடித்தான் காளி. 

"விடு மச்சி... நான் பாத்துக்குரேன்.." குருவி.

பைக்கில் இருந்து இறங்கியவுடன் நேராக மன்றத்தலைவர்  புண்ணியகோடியை நோக்கி சென்ற குருவி..

"மச்சான்.. இந்த தடவ கொஞ்சம் அட்ஜஸ்ட் பன்னிகோ.. அடுத்த படத்துக்கு நானே பாதி செலவு பாத்துகுறேன்.." 

"பரவாயில்ல.. விட்றா மாமா பாத்துக்கலாம்.. நீ ஒன்னும் ஃபீல் பன்னிக்காத.. அடுத்த படத்துக்கு இன்னும் ரெண்டு அடி பெரிய கட்- அவுட் வச்சுருவோம்.." புண்ணியகோடி

"இவ்ளோ நேரம் யோசிச்சு கொஞ்சம் வசனம் ரெடியா வச்சுருக்கேன்..

அறம் செய்ய விரும்பு
எங்க தலைவர் வழி திரும்பு

ஆறுவது சினம்
எங்க தலைவர எதிர்த்தா நீ பொணம்

ஃபுல்லா சாப்பிட்டா எடுக்கணும் ரெஸ்ட்டு
இந்தியாவுலையே  நீ தான் தலைவா பெஸ்ட்டு  

திருச்சி பக்கத்துல குளித்தல..
எங்க தலைவர எதிர்த்தவன் தறுதல

மூச்சு விடாமல் கொட்டி தீர்த்தான் குருவி..

"மாமா... வெறித்தனம் டா... கொன்னுட்ட... அப்படியே எல்லாத்தையும் எழுதி குடு... போஸ்டர் அடிக்க குடுதுடுவோம்." பிரகாசமா மின்னினான் புண்ணியகோடி

"ஒரே நிமிஷத்துல எழுதி குடுக்குறேன் மச்சான்... ஒரு சின்ன ரெக்வஸ்ட்... இந்த தடவ போஸ்டர்ல என் பேர சுறாக்குருவி னு போட்டுக்குறேன்..." வெறும் குருவி நல்லா இல்ல மச்சான்..
















Saturday 7 April 2012

கடவுளுடன் கடைசி 'கட்டிங்'


(கடந்த நான்கு பகுதிகளையும் படித்து விட்டு இந்த கடைசி பகுதியை படிக்கவும்)

"நீங்க நம்புறீங்களோ இல்லயோ... பட் ஐ பிலீவ் கைஜோஸியம்.. கிளிஜோஸியம்.. வெத்தல ஜோஸியம்.. பாக்கு ஜோஸியம்.. கோடங்கி ஜோஸியம்.. ஏன்னா, இது வரைக்கும் நான் பார்த்த எல்லா ஜோஸியமும் பலிச்சிருச்சு..

யு நோ.. இந்தியா வேர்ல்ட் கப் வாங்கும்னு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே எனக்கு தெரியும்..." பெருமிதமாக கடவுளிடம் கூறினேன் 

"நீ அடுத்த தடவ கை ஜோஸியம் பார்த்தா, கையில் உள்ள ஐந்து விரல்களும் ஏன் வெவ்வேறு நீளத்தில் இருக்கின்றன காலில் ஏன் விரல்கள் உள்ளன என்ற கேள்வியை கேட்டுப்பார்..." கடவுளின் பதில்

"யு ஆர் டூ லேட் கடவுள்ஸ்... போன வருஷம் தான் மாட்டுத்தாவனி பஸ் ஸ்டாண்டுக்கு வெளிய உக்காந்து பீடி அடிச்சுட்டு இருந்த ஒரு நாடி ஜோசியக்காரன் இந்த கேள்விய என் கிட்ட கேட்டான்.. எனக்கு தெரியல, அதனால பதிலயும் அவனே சொன்னான்.."

"என்ன பதில் சொன்னான்.." ஆர்வமாக கேட்டார் கடவுள்.
சிறிது நேரம் யோசித்து விட்டு "அது....ரொம்ப வேகமா சொன்னதால எனக்கு புரியல.. ஆனா இந்தியா வேர்ல்ட் கப் ஜெயிக்கும்னு அவன் தான் சொன்னான்.. என்ன காரணம்னு நீங்களே சொல்லிருங்க கடவுளே "

"நீங்கள் குரங்கில் இருந்து பரினாமித்தவர்கள், குரங்குகள் மரங்களின் மீது இலகுவாக தாவி செல்லவும், வேகமாக ஏறி செல்ல வசதியாகவும் தான் கைவிரல்கள் இந்த அமைப்பை அடைந்தது. ஐந்து விரல்களும் ஒரே அளவில் இருந்தால் உங்களால் ஒரு மரக்கிளையை உறுதியாக பிடித்து கொள்ள முடியாது.

உள்ளங்கையை மைக்ரோஸ்கோப் வழியாக பார்த்தால் உங்களுக்கு தெரிய வரும், அது சீரான மேற்பரப்பாக இருக்காது, பெரிய மேடு பள்ளங்கள் மாதிரி இருக்கும், அப்படி இருந்தால் தான் எந்த ஒரு பொருளையும் பிடிக்கும் போது உராய்வு கிடைக்கும். உயிர் வாழ்தலுக்கு இது மிக முக்கியம், இதை தான் ரேகைகள் என்று கூறுகிறீர்கள். அதை பார்த்து எதிர் காலத்தை கூறி கடவுளுக்கே சமாதி கட்டுவது மனிதர்கள் தான்." முழு மூச்சில் இறைத்து முடித்தார் 

"ஆனா வெத்தல ஜோசியம்..." நான் விடுவதாக இல்லை 

"இந்த மாதிரியான சில்லறைத்தனமான கேள்விக்கெல்லாம் எனக்கு விளக்கம் அளிக்க பொறுமையில்லை. உன் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற முழு உரிமை உன்னிடம் மட்டும் தான் உள்ளது. ஆனால், உன்னை ஏமாற்றுவது மிகச் சுலபம். உன் மனதில் மிக எளிதாக ஒரு எண்ணத்தை விதைக்க முடியும்"

"எப்படி??" வினவினேன்..

“சிக்கன் பிரியாணி...” 

ஒரு வார்த்தை மட்டும் கூறிவிட்டு அமைதியாக இருந்தார் 

"ஏற்கனவே பசி வயித்த சாப்புடுது, இதுல நீங்க வேற... 

நீங்க அப்படியே இந்த கட்டிங்க கல்பிக்கிட்டு இருங்க நான் போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாரேன்.." எழுந்துவிட எத்தனித்தேன்

"இப்போது நான் உன்னிடம் ஒரு வார்த்தை தான் கூறினேன்.. ஆனால் அது உனக்கு பல வகையான எண்ணங்களை கிளப்பி விட்டது." கடவுளின் பதில்

"அப்படி எல்லாம் ஒன்னுமில்ல... நான் பசில இருந்தேன்.. அதான்.." சமாளித்து விட்டு அமர்ந்தேன்.

"ஐஸ்வர்யா ராய் என்ற நடிகையை பற்றி இப்போது நீ நினைக்க கூடாது என்று கூறினால், உன்னால் முடியாது ஏனென்றால் அவர் பெயரை கேட்ட உடன் உன் மனம் அவரை உருவமாக தான் பார்த்தது. அடிப்படையாகவே மனம் அப்படி தான் இயங்குகிறது. நீ உன்னை ஒரு ஜோசியக்காரனிடம் முழுமையாக ஐந்து நிமிடம் ஒப்படைத்து விட்டால், அவனுக்கு வேண்டிய அளவு உன்னை உப்யோகித்து கொள்வான்... ஒரு ஜோசியக்காரனுடன் இரண்டு நாள் தங்கி பார்த்தால் உனக்கே அனைத்தும் தெரிய வரும்.." 

விளக்கத்தை கொடுத்து விட்டு வெகு நேரத்திற்கு முன்னர் ஊத்தி வைத்திருந்த ஜானியை ஒரே மடக்கில் விளாசிவிட்டு மீதமிருந்த சரக்கையும் ஊத்த சொல்லி செய்கை காட்டினார்..

"இது தான் கடைசி கட்டிங்க.. ஆனா நான் கேக்குற எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிட்டு தான் இத குடிக்கனும்" சொல்லிவிட்டு ஊத்தி வைத்ததை என் அருகில் எடுத்து வைத்து கொண்டேன்.

"ம்ம்ம் கேளு.. ஆனால் விரைவாக.. எனக்கு நேரமில்லை.." அவசரப்படுத்தினார்

"நீங்க எப்படி இந்த பூமிக்கு வந்தீங்க.. உங்கள படச்சது யாரு...உங்கள படச்சவர படச்சது யாரு..அவர படச்சது யாரு;;;;
எல்லாமே அழிஞ்சு போகும்னு சொல்றீங்க.. அப்படினா, நீங்களும் அழிஞ்சு போவீங்களா.. " இது தான் முதல் கேள்வி

"இந்த கேள்விக்கு நான் கடைசியாக பதில் கூறுகிறேன்." பரிட்சை எழுதும் மாணவன் போல் கூறினார் கடவுள்.

"ரைட்டு விடுங்க.. மேட்டர்க்கு வருவோம்.. ஊருக்குள்ள நெறய பேரு காதல் புனிதமானது... காதல் தெய்வீகமானது.. அப்புடின்னு சொல்றாங்க.. நோ ப்ராப்ளம், பட் அத நம்பி ஒரு சில பேர் காதல் தோல்வில தற்கொல பன்றானுங்க, இல்லனா பணத்த கொண்டு போய் டாஸ்மாக்ல கொட்டி அரசாங்கதுக்கு வருமானத்த ஏத்துறாங்க.. அது என்ன காதல்.. அதுக்கு ஒரு அறிவியல் விளக்கம் தர முடியுமா யுவர் ஆனர்.. " அடுத்த கேள்வியை தொடுத்தேன்..

"உன் பார்வையில் காதல் என்றால் என்ன?" கடவுளின் கேள்வி

"வெல்... ஒரு ஹைக்கு சொல்றேன்.கேட்ச் இட்.

காதல் ஒரு தேங்கா எண்ணெய் மாதிரி..
தேச்சுட்டும் குளிக்கலாம்.. குளிச்சிட்டும் தேய்க்கலாம்..

"ரொம்ப கேவலாம இருக்கு.." காரி துப்புகிற மாதிரி கூறினார் கடவுள்.

"இதுக்கே இப்புடி சொல்றீங்களே.. என் டியர் ஃப்ரெண்ட் ஊட்டி வாயன் ஒரு ஹைக்கு சொன்னான் கேளுங்களேன்..

மச்சி.... காதல் என்பது கலைஞர் குடுத்த டீ.வீ மாதிரி
இலவசமா குடுத்தா எல்லாரும் வாங்குவாங்க.. 

இதுக்கு நீ சொன்னதே பரவாயில்ல

காதல் என்பதன் அர்த்தம், அன்பு அக்கறை கலந்து ஒர் உணர்வு எனப்படுவது. ஆனால், காதல் என்பது மனிதர்களுக்கிடையே ஏற்படும பாலியல் ஈர்ப்பு என்பதாகவே பெரும்பாலும் அறியப்படுகிறது. எனவே,
காதலுக்கு அறிவியல் காரணம் ஏற்கனவே கூறப்பட்டு விட்டது. 

டார்வினின் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய ‘The origin of species’ என்ற புத்தகத்தில் ‘Natural Selection’ என்ற பகுதியில் வருகின்ற ‘Sexual selection’ என்ற பகுதியை படித்துப் பார்.

"அதெற்கெல்லாம் எனக்கு நேரமில்ல.. நீங்களே அது என்னானு சொன்னீங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போவும்.." படித்தால் புரியாது என்பதை வெளிக்காட்டாமல் சமாளித்தேன்.

"உங்களுக்குகான மிக்சிறந்த ஒரு இணையை சந்திக்கும் பொழுதில் உங்கள் மூளையில் ஏற்படும் அதிர்ச்சி அலைகள், பரவசம், சிலிர்ப்பு, போதை அனைத்திற்கும் காரணம் மூளையில் பெருக்கெடுத்து ஓடும் ‘ஹார்மோன்’ என்னப்படும் சில வேதிப்பொருட்கள். 

அவை உங்கள் மூளையின் மற்ற அனைத்து பகுதிகளையும் ஸ்விட்ச் ஆப் செய்து விடுகிறது. உங்களை, நீங்களே இது வரை பார்த்திடாத ஒரு அதீத அன்பு செலுத்தும் கருவியாக உனர்வீர்கள்.. காதலிக்காக உயிரை கூட விட்டு விடலாம் என்று ஒரு சில நொடி பொழுதுகள் தோன்றி மறையும். காதல் தெய்வீகமானது என்பது உண்மை . ஏனென்றால், அதற்கு ஒரு அடிப்படை காரணம் இருக்கிறது.. அதை தான் டார்வின் புத்தகமாக வடித்திருக்கிறார். 

ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன்.. மழை பெய்து முடித்த இரவுகளில், தவளைகள் கூட்டமாக சேர்ந்து கத்துவதை கேட்டிருக்கிறாயா? வினவினார் கடவுள்.

"யா.. யா.. அந்த பயபுள்ளைங்க தன் ஜோடிகளுக்கு சிக்னல் குடுக்கத் தான உசுர குடுத்து கத்துராய்ங்க.." சந்தேகத்துடன் கூறினேன்

"ஆண் தவளைகள் மட்டுமே அந்த சத்தங்களை எழுப்புகின்றன. ஒரு பெண் தவளையானது, சத்தம் எழுப்பி கொண்டிருக்கும் ஆண் தவளைகளை உன்னிப்பாக கவனிக்கிறது, எந்த தவளை, கடைசி வரை, இடைவிடாமல் முழு ஆற்றலோடு சத்தம் எழுப்புகிறதோ அந்த தவளையை தேடி சென்று இனப்பெருக்கம் செய்கிறது. மற்ற தவளைகள் ஒதுங்கி கொள்கின்றன.."

"என்னக் கொடும கடவுளே இது... நல்ல வேல தவளயா பொறக்கல.. " ஆதங்கத்தை பதிவு செய்து வைத்தேன்

"ஆனால் மனித சமுதாயத்தில் இந்த சிக்கல் இல்லை. ஒரு ஆணை பார்த்த மாத்திரத்தில் அவன் நமக்கு பொருத்தமானவனா என்பது பெண்ணிற்கு தெரிந்துவிடும். இந்த தேர்ந்தெடுத்தல் என்பது மனித சமுதாயதின் வளர்ச்சிக்கேற்ப மாறும். ஆதி கால பெண்கள், வீரத்தின் அடையாளமாக விளங்கும் ஆண்களை விரும்பி தேர்ந்தெடுத்தார்கள். காரணம், அத்தகைய ஆண் தன் குடும்பத்தை ஆபத்துகளில் இருந்து எளிதாக மீட்க கூடியவன். 

ஆனால், அந்த அவசியம் இப்போது இல்லை. காலதிற்கேற்ப ஆண் பெண் உறவிலும் மாறுதல் உண்டாகின்றன.

காதலின் திறவு கோல் பெண்களிடம் தான் கொடுக்கபட்டுள்ளது. தனக்கு விருப்பமான துணையை தேர்ந்தெடுக்கும் நுட்பம் பெண்ணிடம் தான் உள்ளது. இது பல ஆண்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் தோற்றுவிக்கப்பட்டது தான் பெண் அடிமைத்தனம். உங்கள் சமூகத்தில் அது தொன்று தொட்டு இருந்து வந்ததால் தான் வளர்ச்சி அடைய வேண்டிய சமூகம் முடங்கி போய் கிடக்கிறது.
 
கடவுள் கூறிமுடிப்பதற்குள் "அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.. இப்போ எல்லாம் அவளுக தான் எல்லத்துலயும் டாப்ல வாராளுக, நம்ம பயலுவ எல்லாம் சும்மா வேடிக்க பார்க்க தான் லாய்க்கு." நிதர்சனத்தை விளக்கினேன். 

"நான் சொல்வது அது இல்லை. இயற்கைத் தேர்வு (Natural Selection). இயற்கையின் தேடல் என்ன தெரியுமா?

"தெரிஞ்சா நான் ஏன் நீங்க போடற மொக்கய உக்காந்து கேட்டுகிட்டு இருக்கேன்" மெலிதான கடுப்புடன் கூறினேன்..

"அதை அவ்வளவு எளிதாக விளக்கி விட முடியாது, தனியாக ஒரு புத்தகமே எழுதலாம். தலைப்பு சகலகலா ஜீன்ஸ். எழுதி விட்டு உனக்கு அனுப்புகிறேன் படித்து தெரிந்து கொள்.

சரி நான் கிளம்பலாம் அதை எடு.." மறைத்து வைத்திருந்த கட்டிங்கை கை காட்டினார் 

நான் விடுவதாக இல்லை "இன்னும் இரண்டே இரண்டு கேள்விகள் தான் மீதமிருக்கு கடவுளே..

முதல் கேள்வி  

தமிழ் நாட்டுல இது வரைக்கும் வாழ்ந்த அல்லது வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனிதர்களில் உங்களுக்கு ரொம்ப புடிச்சது யார்.. ஏன்??

பளிச்சேன்று பதில் வந்தது..

"பெரியார்.."

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். "கடவுளே உங்களுக்கு மேட்டர் தெரியாதா.. அவரு தான் உங்கள வீதி வீதியா மேட போட்டு கழுவி கழுவி ஊத்துனாரு.." 

கடவுளுக்கு என் பதில் தெரிந்திருக்கிறது. என்னை முற்றிலும் எதிர் பார்க்காமல் விளக்கம் குடுக்க ஆரம்பித்தார்..

"சதா கடவுளையே புகழ்ந்து கொண்டே இருப்பதால், தங்களின் மீது கடவுள் தனியாக ஒரு கண் வைத்து பார்த்து கொள்வார் என்று யார் உங்களிடம் கூறியது. மதங்கள், தனி ஒரு மனிதனை நல்லொழுக்க படுத்தவே முயல்கிறது. உங்களுக்கு பொறுமையிருந்தால், இதுவரை இருக்கின்ற அனைத்து மத நூல்களையும் ஒரு வரிசையில் வைத்து விட்டு, ஒன்றன் பின் ஒன்றாக வாசிக்க சொல்லி கேட்டு பாருங்கள். அனைத்தின் சாராம்சமும் ஒன்று தான்.

இதை செய்வதால் ஒரு நன்மை இருக்கிறது. அனைத்து மத நூல்களிலும், சில விஷமிகள், அவர்களின் தேவைக்கேற்ப சில இடைச்சொருகல்கள் செய்திருப்பார்கள் அதை எளிதாக கண்டுபிடித்து விடலாம். முட்டாள்கள் மதங்களை பரப்புகிறார்கள், ஞானிகள் மெய்ப்பொருள் அறிய முயல்கிறார்கள்.

யார் களப்பனி ஆற்றுகிறார்களோ அவர்கள் தான் கடவுளுக்கு விருப்பமானவர்கள். ஜாதி பிரிவு என்பது தான் இது வரை மனிதன் உருவாக்கியதில் சூழ்ச்சிகரமான ஒர் சூன்யம். அதை நம்பி கொண்டிருப்பது முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம். அந்த அறியாமையாய் வேறருக்க முயன்றவர் தான் பெரியார். 

"ஆனால் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்கள் தானே அனைத்து துறைகளிலும் முதன்மையாக இருக்கிறார்கள்." கேள்வியை சொருகினேன்.

"ஒன்றை தெரிந்து கொள், நீங்கள் இப்போது ஜாதி ஒழிப்பின் முதல் கட்டத்தில் தான் இருக்கிறீர்கள். இன்னும் பல வருட காலங்கள் கழியும் போது, ஜாதியற்ற சமூகம் மலரும் போது, அனைத்தும் மாறும். பல காலமாக அடிமையாக இருந்த சமூகம் மீண்டு எழ பெரியார் ஒரு விதையாக  இருந்தார். அதனால் தான் அவரை சொன்னேன்.

மேலும், ஜாதியை எதிர்ப்போர் என்ற புது ஜாதியையும் கடவுளை எதிர்ப்போர் என்ற ஒரு புது மதத்தையும் தான் உருவாக்கி இருக்கிறார் பெரியார். எந்த ஒரு விஷயத்தையும் ஏன்.. எதற்கு.. எப்படி என்று கேட்டு பழக சொன்னவர் அவர்." சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு

"சரி, நான் கிளம்புகிற நேரம் வந்து விட்டது.. அதை எடு.." கடைசி கட்டிங்கை கை நீட்டினார்..

கட்டிங்கை அவரிடம் கொடுத்து விட்டு, 

"ஆனால் இன்னும் நீங்க என் முதல் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.."

"நீங்க எப்படி இந்த பூமிக்கு வந்தீங்க.. உங்கள படச்சது யாரு...உங்கள படச்சவர படச்சது யாரு..அவர படச்சது யாரு;;;;
எல்லாமே அழிஞ்சு போகும்னு சொல்றீங்க.. அப்படினா, நீங்களும் அழிஞ்சு போவீங்களா..."

"ஹா ஹா ஹா..." உரக்க சிரித்து விட்டு கடைசி கடிங்கை கவிழ்த்தார்..

எப்போதும் நினைவில் வைத்துக்கொள், இந்த ப்ரபஞ்சத்தின் மிக அரிய படைப்பு உயிர் தான்.. அதை தவிர இந்த ப்ரபஞ்சத்தில் வேறெந்த கடவுளும் கிடையாது.

தனக்கென்று ஒரு உடலை, தானாக அமைத்து, தானாக பரினாமித்த, 'உயிர்' தான் கடவுள். உயிருள்ள அனைத்தும் கடவுள். இதை தவிர வேறு எங்கு கடவுள் இருக்க முடியும்???. வாழ வேண்டும் என்பது மட்டுமே அதன் நோக்கம். ஒரு உயிருக்கு தீங்கு நினைப்பவன் கடவுளை கொலை செய்கிறான். இந்த அறிவு மிருகங்களுக்கு கிடையாது. சில மனிதர்களுக்கும் கிடையாது. நீங்கள் வாழ சில உயிரினங்களை கொல்வது எதனாலென்றால், நீங்கள் பரிணாமத்தின் உச்சத்தில் இருக்கிறீர்கள். இந்த கொலைகளை செய்யாமல் உயிர் வாழமுடியாது. கடவுள் என்ற வார்த்தை காலப்போக்கில் திரியபட்டு அறியப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். .

சொல்லி விட்டு எழுந்தார்..

"எங்க போறீங்க கடவுளே எங்கிட்ட இன்னும் நிறைய கேள்வி இருக்கு.."

"எனக்கு நேரமில்லை.. நான் கிளம்புகிறேன்.."
.
"அப்போ நீங்க யாரு... இன்னும் சொல்லவேயில்ல.. உங்கள எப்ப மறுபடியும் பாக்குறது,,??"

"நான் மறுபடியும் வருவது குறித்து உன் ஆழ்மனதிடம் தான் கேட்க வேண்டும்.."

"மனிதன் இறந்த பிறகு அவன் உயிர் எங்கே போகிறது கடவுளே..??"

"ஒரு பூனை இறந்த பிறகு அதன் உயிர் எங்கே போகிறதோ அங்கே தான்..."

"சரி எல்லா உயிரும் சேர்ந்து எங்கே போகிறது..??"

"உனக்கு சொன்னாலும் புரியாது அதனால் உன்னிடம் கூற முடியாது."

"அதெல்லாம் புரியும் சொல்லுங்க.."

"உனக்கு தெரிய வேண்டுமென்றால் நீ இறக்க வேண்டும்.. தயாரா...?"
.
"ரைட்டு விடுங்க.. மறுபிறவி உண்டா இல்லயா ??"

"தெரிஞ்சு என்ன செய்ய போற..??"

"தெரிஞ்சு வச்சா நாலு பேர் கிட்ட சொல்லலாம்ல..."

"நீ கேட்கின்ற அனைத்து கேள்விகளுக்கும் உனக்கே விடை தெரிய வரும்... என்னால் எதுவும் கூறமுடியாது"

"சரி... நீங்க யாரு.. எங்க இருக்கீங்க..??"

"இத ஏன் நீ என்னிடம் முதலிலே கேட்கவில்லை.."

"லாஸ்ட்டா கேக்கலாம்னு இருந்தேன்.."

"என்ன ஒரு முட்டாள்தனமான சிந்தனை உனக்கு.. கடவுள் உன்கூட உக்காந்து சரக்கடிப்பாரா..???"

"நீங்க தான அடிசீங்க..."

"என்ன முதல்ல எங்க பார்த்த..??"

"மீன் மார்கெட்ல..."

"அதுக்கு முன்னாடி நீ என்ன பன்னிட்டு இருந்த..??

"நான் மட்டும் வீட்ல தனியா.... இல்ல.,.. நானும் என் ஃப்ரெண்டும்.... இல்ல... ஆமா…. என் ஃப்ரெண்ட் ஊட்டி வாயன் எங்க போனான்..??"

"அவன் வழக்கமா பண்றத தான் பன்னிட்டு இருக்கான்.."

"என்ன பண்றான்..

"பல்லு வெளக்கிடே எதிர் வீட்டு நித்யாவா பார்த்துட்டு இருக்கான்.."

"நீங்க இங்க இருக்கீங்களே...."

"இது திரைக்கதைகளில் உங்க தாத்தா காலத்து டெக்னிக்.. நாம் கூறவிரும்பிய கருத்துகளை வேறொரு கதாபாத்திரத்தின் வழியாக கூறுவது ‘Multi dimensional characterisation’ .ஏற்கனவே நிறைய எழுத்தாளர்கள் இந்த முறையை உபயோகித்து இருக்கிரார்கள்.. எந்திரிச்சு வேலைக்கு கிளம்பு..."

"என்ன கடவுளே பேசுறீங்க எனக்கு ஒன்னுமே புரியல.. மறுபிறவி இருக்கா இல்லயா...சொல்லிட்டு போங்க.."

"செருப்பால அடிப்பேன்.."

கடவுளே... அப்படி திட்டாதீங்க..

"இதுக்கு மேல எந்திரிக்கலனா.. கெட்ட வார்த்த போட்டு கிழிப்பேன்.."

"கடவுளே..."

“எந்திரி டா @#$%^&* **&^^&* எவ்வளவு நேரம் டா உன்ன உசுப்புறது.. ஆல்ரெடீ லாஸ் ஆஃப் பே.. மணி 8 ஆகுது சீக்கிரம் எந்திரிச்சு கெளம்பு” 

"ஊட்டி வாயன்" உரக்க கத்தி கொண்டிருந்தான். 

அப்போது தான் எழுந்தேன்... 

மணி சரியாக காலை 8.