Tuesday 18 September 2012

சகல கலா ஜீன்ஸ் - பெயர்க்காரணம்

(இந்த பதிவு முழுக்க முழுக்க ‘செக்ஸ்’ பற்றிய விழிப்புணர்வு தான்.. அதனால் பதினட்டு வயதுக்கு கீழுள்ளவர்கள் இதை தயவு செய்து நேரம் செலவிட்டு படிக்கவும்.. நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டாம்)

செக்ஸ் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது தான், இன்றியமையாததும் கூட, ஆனால், செக்ஸ் என்று நான் சொல்ல வருவது மனிதனை மட்டும் சார்ந்தது அல்ல. இது, ஒவ்வொரு உயிரின் செக்ஸையும் ஆராய்வது. மனிதனின் செக்ஸையும், அதை சார்ந்த விஷயங்களையும் ஏற்கனவே பல மஞ்சள் எழுத்தாளர்கள் எழுதி விட்டதால் நான் தனித்து நிற்க விரும்புகிறேன். நான் ஆராய்வது செக்ஸ் என்ற வார்த்தையின் அடிப்படையை, அதனால் தான் கூறினேன், நாற்பது வயது மேலுள்ளவர்கள் இதை படிக்க வேண்டாம் என்று.

எனக்கும் உனக்கும் மற்றும் இதை வாசிக்கும் அனைவருக்கும் மட்டும் தான் செக்ஸ் உணர்வு உள்ளது என்று தப்பு கணக்கு போட்டு கொண்டிருந்தேன். ஆனால்,, என் அறையில் உள்ள பல்லி, பாச்சான், பூரான், பாம்பு மற்றும் கொசு முதற்கொண்டு ‘அதை’ கடமையாக செய்து கொண்டிருக்கும் போது, நான் அவைகளை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் போது, நான் அவைகளாக பிறந்திருக்கலாம் என்று எண்ணும் போது எழுந்த சிந்தனையின் ஆராய்வின் முடிவாக கூட இது இருக்கலாம்.

என் வீட்டில் இருக்கும் ஒரு மாமரத்தை கேட்கிறேன், நீ எப்படி இனப்பெருக்கம் செய்கிறாய் என்று, அது சிரித்து கொண்டே கூறுகிறது, அது எளிதானது தான், உனக்கு சுவையாக ஒரு பழத்தை தயாரித்து கொடுத்து, அதன் நடுவில், சுவையில்லாத என் விதையை வைத்து அனுப்புகிறேன், நீ பழத்தை தின்று விட்டு விதையை தூக்கி எறிந்து விடுகிறாய், ஏணென்றால் என் விதை உனக்கு ருசியாக இல்லையென்பதால் தான். அதை அவ்வாறு தயாரித்தது நான் தான், நீ உனக்கு லாபமாக என்னை பார்க்கிறாய். நான், என் இனத்தை பெருக்கி கொள்ள ஒரு வாய்ப்பாக உன்னை பார்க்கிறேன், நீ மட்டுமல்ல எனக்கு அடிமையாக பல உயிரனங்கள் உண்டு என் நோக்கம் ஒன்று தான், என்னை இவ்வுலகம் முழுதும் பரப்ப வேண்டும் என்பது மட்டும் தான். அதற்காக உன்னை மட்டுமல்ல இன்னும் பல உயிரினங்களை உபயோகித்து கொள்கிறேன்.

அதற்கு மேல் அம்மரத்திடம் பேச விருப்பமில்லை. அடுத்ததாக என் கண் முன்னே பறந்து சென்ற ஒரு சிறு வண்டை கவனித்தேன், அது ஒரு மலர் மீது சென்று அமர்ந்தது, அதனிடம் பேச விரும்பி, மெதுவாக அதனிடம் சென்றேன், என்னை கவனித்து விட்ட அவ்வண்டு சட்டென தன் இறக்கை விரித்து கண்ணிமைக்கும் நேரத்தில் கலைந்து விட்டது, இப்போது அவ்வண்டு அமர்ந்திருந்த மலர் என்னை முறைத்து பார்ப்பதை கவனித்து விட்டேன். எதற்காக என்னை முறைக்கிறாய், நான், உன்னை அந்த வண்டிடம் இருந்து காப்பற்றி இருக்கிறேன். என்னை நீ பாராட்ட வேண்டும் என்று கூறி முடிப்பதற்குள்,, அம்மலர் என்னை நோக்கி தொண்டை கிழிய கத்த ஆரம்பித்தது.

“அடே மூடா.. என் வாழ்க்கையை கெடுத்து விட்டாயே, நீ நல்ல இருப்பியா.. “
திகைப்பில் நான் அழ்ந்திருந்த போது....சிறிது நேர அழுகைக்கு பிறகு அதுவே கூறத் தொடங்கியது...

என்னிடம் தேன் சுவையாக இருக்கிறது, தேனை எடுப்பதற்காக ஒரு வண்டோ அல்லது பூச்சியோ, என் மீது அமரும் போது, நான், ஏற்கனவே தயாரித்து வைத்திருந்து மகரந்த தூள்கள் அப்பூச்சியின் காலில் ஒட்டிக் கொள்கிறது, அடுத்த மலரிடம் அந்த பூச்சி செல்லும் போது அதன் காலில் ஒட்டியிருக்கும் மகரந்த தூள் அங்கு விழுந்து விடுகிறது, இது தான் ஒரு செடியின் இனப்பெருக்கத்துக்கு தேவை. அதையும் கெடுத்து விட்டாயே பாவி...
ஒரு மலர் அழுததை அப்போது தான் பார்த்தேன். பெரிதாக அலட்டிக் கொள்ளவிள்ளை. அன்று தான் முழுதாக மழை நனைத்திருந்தது பூமியை, ஆதலால், என் வீட்டினுள் சிறு குட்டை தேங்கி விட்டது சென்னை மா நகராட்சியின் அலட்சியத்தால்... ஆனால், அக்குட்டையில் தேங்கி நின்ற தண்ணீரில், நான் கவனித்து விட்டேன் அத்தவளைகளை. கூட்டம் கூட்டமாக கத்திக்கொண்டிருந்தன, ஒரே ஒரு தவளை மட்டும் அமைதியாக இருந்ததை நான் அவதானித்து விட்டேன், என் அவதானிப்பை அதுவும் அவதானித்து விட்டு என்னை நோக்கி மெதுவாக நகர்ந்து வந்தது.. நான் பேச முற்படும் முன் அதுவே பேச தொடங்கியது, எதற்காக நாங்கள் இவ்வளவு சத்தம் எழுப்புகிறோம் என்று தானே யோசித்து கொண்டு இருக்கிறாய்.. பதிலை நானெ கூறுகிறேன்

“ஆண் தவளைகள் மட்டுமே அந்த சத்தங்களை எழுப்புகின்றன. ஒரு பெண் தவளையானது, சத்தம் எழுப்பி கொண்டிருக்கும் ஆண் தவளைகளை உன்னிப்பாக கவனிக்கிறது, எந்த தவளை, கடைசி வரை, இடைவிடாமல் முழு ஆற்றலோடு சத்தம் எழுப்புகிறதோ அந்த தவளையை தேடி சென்று இனப்பெருக்கம் செய்கிறது. மற்ற தவளைகள் ஒதுங்கி கொள்கின்றன.. இனப்பெருக்கத்துக்காக தான் இவ்வளவு ஆற்றல் வீணாகி கொண்டிருக்கிறது.. வேறொன்றுமில்லை..,இனப்பெருக்கத்தை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். திறமையுள்ள ஆண் தவளையின் ‘ஜீன்’ மட்டுமே இங்கே பரப்பப்படும். அத்ற்கு தான் இத்தனை சோதனைகள், எங்கள் இனம் தொன்று தொட்டு வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். சிறப்பாக வளர வேண்டும். திறமையுள்ள சகல கலா ‘ஜீண்’கள் மட்டுமே இங்கு பரப்ப படவேண்டும், ஆதலால், எங்கள் இனத்தை விருத்தியாக்கும் உரிமை பெண்களிடம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. உங்களை மாதிரி பெண்ணடிமைத்தனத்தை நாங்களும் ஆதரித்திருந்தால் என் இனம் அழிந்து விடும் முட்டாள் மானிடா... ஒரு பூவிடம் இருக்கும் தேன் போன்றது தான் செக்ஸ். பூவில் இருக்கும் தேன் ருசியாக இல்லையென்றால் எந்த வண்டும் தேனீயும் அதன் அருகில் கூட போகாது. அதன் சந்ததி அழிந்து போய்விடும் அதே தான் அனைத்து உயிருக்கும் உள்ள சூட்ச்சமம், செக்ஸ் என்பது ஒரு இயற்கை பொறி, இவ்வுயிர் தன்னை அழிந்து கொள்ளாமல் பாதுகாக்க விரும்பி, உக்காந்து யோசிச்சு உருவாக்குன விஷயம் தான் செக்ஸ் எனப்படுவது.... "

மூச்சிறைக்க பேசி விட்டு குட்டைக்குள் குதித்து மறைந்து விட்டது அந்த தவளை... ஒரு சில நிமிட் இடைவேளிக்கு பிறகு மேலே வந்த அத்தவளை, மீண்டும் ஒரு முறை உரக்க கத்தியது

‘சகல கலா ஜீன்ஸ்’ (The Ultimate Genes) என்பது தான் செக்ஸின் நோக்கம்.

(தொடரும் )

Thursday 31 May 2012

கடவுள் இருக்கிறாரா- விஞ்ஞான விளக்கம்

டவுள் இருக்கிறாரா இல்லையா. அனைத்து விஞ்ஞானிகள் முன்னும் வைக்கப்படும் இறுதி கேள்வி இதுவாகத்தான் இருக்க முடியும். பெரும்பாலானோர் கடவுளை விளக்க முனைவதில்லை, மறுதலிக்கவும் மறுக்கவில்லை. கடவுளும் ஆன்மீகமும் வெவ்வேறு பாதையில் பயனிப்பதாகத்தான் அனைவரும் பார்க்கிறார்கள். ஆனால் அறிவியல் ரீதியாக கடவுளை விளக்க முடியாது என்ற கூற்று அபத்தமானது. அறிவியலில் அனைத்திற்கும் விடை இருக்கிறது, இந்த பதிவை படித்து முடித்தவுடன் உட்க்கார்ந்து யோசித்து பார்க்கவும்.

இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் சர் ஐசக் நியுட்டன் வகித்து வந்த பேராசிரியர் பதவியை சில வருடங்கள் முன்னர் வரை வகித்தவரும், தற்கால இயற்பியலில் பெரும்பங்கு ஆற்றிக்கொண்டிருக்கும் ஸ்டீபன் ஹாக்கிங்க் (Stephen Hawking) தன் புத்தகமான “தி க்ராண்ட் டிசைன்” (The Grand Design) மூலமாக ப்ரபஞ்ச உருவாக்கதின் அடிமட்ட தேவைகளை எடுத்து கூறி கடவுளை நேரடியாக விமர்சிக்கிறார். புத்தகத்தின் சில பக்கங்களை மட்டும் மொழிப்பெயர்த்துவிட்டு தொடர்வோம்:

“இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது தான் என் முழு நேர சிந்தனை, அதில் வெற்றியும் கிடைத்து இருக்கிறது . எளிதாக விளக்க முனைகிறேன், சிறிது கற்பனை குதிரையை தட்டி விட்டால் நீங்களும் வெற்றி பெறலாம்...

வானத்தை தினமும் பார்க்கிறோம், பூமியில் இருந்து மேல் நோக்கி சென்றால் வானத்தை தொட்டு விடலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் அறியாமையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம், அது ஒரு 'முடிவில்லாத' வெட்டவெளி (space), சூரியனில் இருந்து வரும் 'ஒளி' சிதறுவதால் மட்டுமே அந்த வெட்ட வெளி நமக்கு நீலமாக (Blue) தெரிகிறது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.
பெருவெடிப்பு (Big bang, which is the origin of universe) நடப்பதற்கு முன்னர், "ஏதுமற்ற நிலை" தான் இருந்தது, அதாவது, கண்களை மூடி கொண்டு பார்ப்பதை போல தான்..... 'ஒன்றுமில்லை' என்ற நிலை, வெளி (Space) என்ற ஒன்று கூட கிடையாது (கற்பனை செய்து கொள்ளவும்).

பெருவெடிப்பு நடந்த அந்த நொடி தான் காலத்தின் (Time) ஆரம்பம், ஆற்றலோ அல்லது பருப்பொருளோ (Energy or mass, since both are inter-related) வெடித்து சிதறியது தான் அந்த நிகழ்வு. இது வரை அனைவரும் அறிந்தது தான், ஆனால், உங்களுக்கு ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகிறேன், வெடித்து சிதறிய தூசுகள் (அணுக்களின் கூட்டம்) சீரான இடைவெளியில் (equal distance) பரவி இருந்திருந்தால் இந்த பிரபஞ்சம் உருவாகி இருக்காது. 
 வெடித்து சிதறிய தூசுகள் 'ஒழுங்கற்ற' நிலையில் (dis-ordered state) சிதறியதால் மட்டுமே இப்பிரபஞ்சம் உருவாகியது..

காரணம்... இந்த வெட்ட வெளியில் இருக்கின்ற ஒவ்வொரு அணுவிற்கும் ஈர்ப்பு விசை உண்டு. தூசுகள் (அணுக்களின் கூட்டம் ) , சீரான இடைவெளியில் பரவி இருந்தால், ஈர்ப்பு விசையினால் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்காது, இந்த பிரபஞ்சமும் உருவாகி இருக்காது...நீங்களுமில்லை.. நானுமில்லை. நான் சொல்ல வருவது ஒன்று தான், ஒழுங்கற்ற நிலை தான் இப்பிரபஞ்சத்தை உருவாக்கி இருக்கிறது. என் கேள்வி என்னவென்றால், கடவுளிற்கு இங்கு என்ன வேலை ??. 'ஆற்றல்' என்று நாம் விஞ்ஞானத்தில் வருவிக்கப்பட்டது (Derived) தான் கடவுள் என்பதை நாம் ஏன் உணரவில்லை ???. கடவுள் என்ற கோட்பாடை நாம் ஏன் கொலை செய்கிறோம் ??.
ஆனால், அனைவராலும் தடுக்க முடியாத கேள்வி. அதெப்படி ஏதுமற்ற ஒன்றில் இருந்து ப்ரபஞ்சம் உருவாகியது ??
இதற்கும் பதில் வைதிருக்கிறது அறிவியல்..

இயற்பியலில் சிறிது பின்னோக்கி நியூட்டன் வாழ்ந்த காலத்திற்கு செல்வோம். நியூட்டனின் கணிப்பு படி, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும், கிரகங்களும் கனகச்சிதமாக தங்களின் பாதைகளில் சுழன்று கொண்டு இருக்கின்றன, சுழன்று கொண்டு தான் இருக்கும். ஆனால், காலபோக்கில் விஞ்ஞானத்தின் பிடியில் நியூட்டனின் கணிப்பு பொய்த்தது. அது வரை இருந்த அறிவியலின் பார்வை மாறியது. 'classical physics' என்று அது வரை இருந்த தத்துவங்களுக்கு பெயர் வைத்து மூடிவிட்டார்கள்.

அவர்கள் கண்டுபிடித்தது என்னவென்றால், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒன்றை விட்டு ஒன்று விலகி செல்கிறது, உதாரணம், சூரியனை பூமி சுற்றுகிறது, ஆனால், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள இடைவெளி சிறிது சிறிதாக கூடிகொண்டே போகிறது. இந்த விலகல் தொடர்ந்து கொண்டே இருக்கும். எது வரை தொடருமென்றால் ஒவ்வொரு அணுவும் தனித் தனியாக பிரிந்து அழிந்து போகும் வரையில். இறுதியில், ஏதுமற்ற நிலை என்று ஆரம்ப நிலைக்கே இந்த பிரபஞ்சம் சென்று விடும் என்பது அறிவியலின் கருத்து. இது நியூட்டன் அறிந்திராதது. 

விரிவாக தெரிந்து கொள்ள பிக் ரிப் (Big Rip) என்று விக்கிபீடியாவில் தட்டவும். உயிரினங்கள் மட்டுமே இறந்து போகும் என்று நினைக்காதீர்கள், இந்த பிரபஞ்சமே ஒரு நாள் இறந்து போகும். அறிவியலின் கணக்குகளை வைத்து எப்பொழுது அழிந்து போகும் என்று கூட கண்டுபிடித்து விட்டார்கள். 'Quantum physics' என்று இயற்பியல் பிரிந்த பொழுதில் தான் கடவுளை பற்றிய கேள்வி எழுந்தது. (இங்கு அதை நான் விளக்கவில்லை)
இந்த அனைத்து கண்டுபிடிப்புகளுடன், டார்வினின் தத்துவங்களை பொருத்தி பார்த்தால் கடவுளை ஓரளவுக்கு தொட்டு விடலாம். தான் வாழ்கின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்ப, காலப்போக்கில், தன் உடலை மாற்றி கொள்ளும் திறமை ஒவ்வொரு உயிருக்கும் இருக்கிறது என்பது தான் டார்வினின் கண்டுபிடிப்பு.

எனது தாழ்மையான கருத்து என்ன வென்றால்.. தனகென்று ஒரு உடலை, தானாக அமைத்து, தானாக பரினாமித்த, 'உயிர்' தான் கடவுள். உயிருள்ள அனைத்தும் கடவுள். இதை தவிர வேறு எங்கு கடவுள் இருக்க முடியும்???. வாழ வேண்டும் என்பது மட்டுமே அதன் நோக்கம். ஒரு உயிருக்கு தீங்கு நினைப்பவன் கடவுளை கொலை செய்கிறான். இந்த அறிவு மிருகங்களுக்கு கிடையாது. சில மனிதர்களுக்கும் கிடையாது. நாம் வாழ சில உயிரினங்களை கொல்வது (தாவரங்கள் மற்றும் சிக்கன்கள்) எதனாலென்றால், நாம் பரிணாமத்தின் உச்சத்தில் இருக்கிறோம். இந்த கொலைகளை செய்யாமல் நாம் உயிர் வாழமுடியாது. கடவுள் என்ற வார்த்தை காலப்போக்கில் திரியபட்டு அறியப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும்....